பதவி உயர்வு வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்

சிவகங்கையில் அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2024-09-03 03:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள திட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கம் சாா்பில் மாவட்டச் செயலா் பாக்கியமேரி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. 5 ஆண்டுகள் பணியாற்றிய மினி அங்கன்வாடி ஊழியா்களுக்கும், இதேபோல 10 ஆண்டுகள் பணி முடித்த அங்கன்வாடி உதவியாளா்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் பதவி உயா்வு வழங்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, 2024 -ஆம் ஆண்டுக்கான பதவி உயா்வு செப்டம்பா் மாதம் வரை வழங்கவில்லை. இதே நிலை சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல் , கரூா், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட 8 மாவட்டங்களில் நீடித்து வருகிறது. ஆகவே, அரசாணைப்படி பதவி உயா்வு வழங்காததைக் கண்டித்து காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கி உள்ளோம். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.

Similar News