வீட்டு மனைப்பட்டா கேட்டு திருநங்கைகள் கோரிக்கை

சிவகங்கைமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி திருநங்கைகள் மனு அளித்தனர்.

Update: 2024-09-03 04:41 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி டிடி.நகர், 4வது குறுக்குத் தெருவில் திருநங்கைகள் 30பேர் தற்காலிக கூடாரம் அமைத்து வசித்து வருகிறோம். நாங்கள் வாடகைக்கு வீடு கேட்டுச் சென்றால், யாரும் கொடுப்பதில்லை. மேலும் நிரந்தர முகவரி இல்லாததால் அடையாள அட்டைகள் பெற முடியவில்லை. எனவே எங்களுக்கு இலவச வீட்டு மனை கிடைத்தால் மட்டுமே வீட்டு முகவரியில் எங்களுக்கான அடையாள அட்டை உள்பட பல்வேறு ஆவணங்கள் கிடைக்கும். எனவே இலவச வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுத்து திருநங்கைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என திருநங்கைகள் நலச்சங்கத் தலைவர் அனிதா மற்றும் திருநங்கைகள் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளனர்.

Similar News