கள்ள லாட்டரி விற்ற நபர் கைது

லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு

Update: 2024-09-03 05:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா லாலாபேட்டை கொடிக்கால் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (45). இவர் அப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் லாட்டரி சீட்டு விற்ற மணிகண்டன் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 15 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Similar News