போலியாக நிலம் கிரயம் செய்ததாக பெண் புகார்

7 பேர் மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு

Update: 2024-09-03 05:23 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் குளித்தலை காவிரி நகரை சேர்ந்தவர் அம்சவல்லி (45). இவர் கலப்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் இவரின் தந்தை வழியில் கல்லடை பகுதியில் பூர்வீக நிலம் உள்ளது. இதை இவரின் சித்தப்பா பேரன் விக்னேஷ் என்பவருக்கு போலியாக கிரைய ஆவணம் செய்திருந்ததை அறிந்த அம்சவல்லி கடந்த ஜூன் 27 ஆம் தேதி ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பேசியதாகவும் அங்கு இவரின் உறவினர்கள் தகாத வார்த்தையால் பேசி அடிக்க வந்தபோது தப்பித்து வந்ததாக புகார் அளித்துள்ளார். இது குறித்து தோகைமலை போலீசார் பெருமாள், முத்துசாமி, விக்னேஷ், மணிமேகலை, வேலம்மாள், சுபாஷ், ஜோதி ஆகிய 7 பேர் மீது தோகைமலை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Similar News