கீழடி அருங்காட்சியத்திற்கு விடுமுறை அறிவிப்பு

திருப்புவனம் அருகே கீழடி அருங்காட்சியத்திற்கு வரும் செப்.11 இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Update: 2024-09-03 07:36 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், வட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகத்திற்கு செப்.11ல் இமானுவேல் சேகரன் 67-வது நினைவு தின நிகழ்ச்சியினை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படவுள்ளது வருகின்ற 11.09.2024 ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெற இருக்கின்ற இமானுவேல் சேகரன் 67-வது நினைவு தினம் அமைதியாக நடைபெறவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், பார்வையாளர்களின் நலன் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகம் எதிர்வரும் 11.09.2024 அன்று இயங்காது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News