திருப்பூரில் புதிய தேசிய கொள்கையை ஏற்காததால் தமிழ்நாடு அரசின் கல்வித் துறைக்கு நிதியை ஒதுக்காத மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

திருப்பூரில் புதிய தேசிய கொள்கையை ஏற்காததால் தமிழ்நாடு அரசின் கல்வித் துறைக்கு நிதியை ஒதுக்காத மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-09-04 11:25 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாடு அரசின் கல்வித் துறைக்கு நிதியை ஒதுக்காத மத்திய பாஜக அரசை கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம்! ஆர்எஸ்எஸ் சின் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாடு அரசின் கல்வித் துறைக்கு நிதியை ஒதுக்காத மத்திய பாஜக அரசை கண்டித்தும் ., உடனடியாக தமிழக கல்வித்துறைக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்ககூறியும்  திராவிடர் கழக இளைஞரணி திராவிடர் மாணவர் கழகம் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் .,  திமுக ., மதிமுக .,  விடுதலை சிறுத்தைகள் ., இந்திய தேசிய காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி .,  தந்தை பெரியார் திராவிட கழகம் ., உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டதோடு ,. பெரியார் பிறந்த மண்ணில் ஆர்எஸ்எஸ்சின் கல்விக் கொள்கை எடுபடாது என்றும் .,  ஆர் எஸ் எஸ் சின் கல்விக் கொள்கையை திணிக்கும் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை  எழுப்பினர் .

Similar News