கணவன் மனைவி பிரச்சினையில் குறுக்கே வந்து தட்டி கேட்டதால் ஆத்திரத்தில் கொலை செய்தேன்

அண்ணனை கொன்ற தம்பி வாக்கமூலம்

Update: 2024-09-04 12:11 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருத்தாசலம் அடுத்த சின்னக்கண்டியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் செல்வமணி (55). திருமணம் ஆகி மனைவி உள்ள நிலையில் இரண்டு மகன்கள் இருந்தனர். மகன்கள் இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒருவர் பின் ஒருவராக இறந்த விட்ட நிலையில் மனைவி மற்றும் பேரப்பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்தார். கட்டிட மேஸ்திரியான இவர் விருத்தாசலம் பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் கட்டிடங்கள் கட்டி வருகிறார். இவரது தம்பி சுப்பிரமணியன் (45). கொத்தனாரான இவருக்கும் திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தனது அண்ணனுடன் சேர்ந்து கொத்தனார் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு மது போதையில் இருந்த சுப்பிரமணியன் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது அங்கு வந்த செல்வமணி ஏன் இப்படி தகராறு செய்கிறாய் என தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் செல்வமணியை அசிங்கமாக திட்டி தாக்கியதுடன் வீட்டில் கறி வெட்டுவதற்கு வைத்திருந்த கத்தி ஒன்றை எடுத்து வந்து செல்வமணியின் முதுகில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த செல்வமணியை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அண்ணனை கொலை செய்து விட்டு தப்பி ஓடி மாமனார் ஊரான ஆலடியில் பதுங்கி இருந்தபோது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து விருத்தாசலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவரை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்து சுப்பிரமணியன் கொடுத்த வாக்குமூலத்தில் கணவன் மனைவி எங்கள் இருவருக்கும் குடும்பப் பிரச்சினை நடந்தபோது எனது அண்ணன் குறுக்கே வந்து, தட்டி கேட்டதால் போதையில் இருந்த நான் ஆத்திரத்தில் கத்தியால் குத்திவிட்டு சென்று விட்டேன். பிறகு தான் என் அண்ணன் இறந்து விட்டார் என்பது தெரிய வந்ததாக அவர் வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். அண்ணனை தம்பி கத்தியால் குத்திக் கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News