நெல்லை அருங்காட்சியகத்தில் ஆசிரியர்களுக்கு பரிசு

நெல்லை அரசு அருங்காட்சியகம்

Update: 2024-09-06 05:21 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் ஆசிரியர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட அரசு அருங்காட்சியகமும் ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி ஸ்டார் கழகமும் இணைந்து நடத்திய இந்த விழாவில் திருநெல்வேலி மாவட்டம் முனஞ்சிப்பட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் ராஜேஷ், சித்த மருத்துவர் சுபாஷ் சந்திரன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ரோட்டரி கிளபின் தலைவர் ராஜேஷ் ரவி வரவேற்புரை நிகழ்த்தினார். எழுத்தாளர் மரிய ஜேசு சிறப்புரை நிகழ்த்தினார். செயலாளர் வெங்கடேசன் பொருளாளர் முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.இதில் திருநெல்வேலி,தென்காசி, தூத்துக்குடி,விருதுநகர், கன்னியாகுமரி,மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு ஆசிரியர்கள், வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர்கள், இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் எனப் பல்வேறு வகையில் தேர்வு செய்யப்பட்டிருந்த 70 பேருக்கு பாராட்டுச்சான்றிதழும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

Similar News