மெக்கானிக் ஷெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வைக்கோலுடன் நின்ற லாரி தீப்பிடிப்பு

Update: 2024-09-07 03:16 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில்முத்துவக்கீல்சாலையில் அலி என்பவரது மெக்கானிக் ஷெட்டில் இரண்டு நாட்களாக தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் இருந்து ஆம்பூர் நோக்கி வைகோலை தமிழ்ச்செல்வன் என்பவருக்கு சொந்தமான லாரியில் ஏற்றி சென்றுள்ளனர். அப்பொழுது மயிலாடுதுறை நோக்கி லாரி வரும் பொழுது பழுது ஏற்பட்டதன் காரணமாக மயிலாடுதுறையில் உள்ள மெக்கானிக் ஷெட்டில் பழுது சரி செய்வதற்காக நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில், இன்று காலை ஆறு மணி அளவில் திடீரென்று வைக்கோல் தீ பற்றி எறிந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்‌ இதனால் லாரி முற்றிலும் சேதம் அடையாமல் தவிர்க்கப்பட்டது. ஜேசிபி இயந்திரம் மூலம் லாரியில் இருந்த வைக்கோலை கீழே தள்ளி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியே புகைமண்டலமாக காணப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட இடத்துக்கு சுமார் 100 மீட்டர் தொலைவில் கலைஞர் நகர் என்ற குடிசை பகுதி அமைந்துள்ள நிலையில் தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Similar News