திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

Update: 2024-09-10 18:02 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியம் வாணாபுரம் பகண்டை கூட்டுச்சாலை மும்முனை சந்திப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு மாணவர்களின் கல்வி வளர்ச்சியை தடை செய்ய நினைக்கின்ற பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட அமைப்பாளர் சாமிதுரை தலைமையில், அறிவியல் மன்ற அமைப்பாளர் முருகன், ஒன்றிய அமைப்பாளர் கார்மேகம் மற்றும் நாகராஜ், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் அய்யனார் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மேலும் மதியழகன், ராமர், பெரியார் வெங்கட், வெற்றிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் ஒன்றிய தலைவர் குமார் நன்றி கூறினார்.

Similar News