தாராபுரம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில்  ஒருவர் பலியானார்.

தாராபுரம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில்  ஒருவர் பலியானார்.

Update: 2024-09-11 04:07 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தாராபுரம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில்  ஒருவர் பலியானார். தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம் .இவரது மகன் அபினேஷ்( வயது 29.) இவர் பைக்கில் இவரது நண்பர் சதீஷ்குமார் உடன் அலங்கியம் தாராபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.பைக்  அலங்கியம் ரோட்டில் ஆற்றுப்பாலம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார்  மோதி விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் பைக்கில் வந்தஇருவரும் படுகாயம் அடைந்தனர். ஆம்புலன்ஸ் முலம் இருவரையும்  தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அபினேஷ் உயிரிழந்து விட்டதாக கூறினார்கள். சதீஷ்குமார் படுகாயத்துடன் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். இது குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 29 வயது இளைஞர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News