ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

பயிற்சி

Update: 2024-09-11 05:34 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுரியில் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி குழுவின் நிதி உதவி வாயிலாக ஆசிரியர்களுக்கு ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சி தொடங்கியது. கல்லுாரி முதல்வர் சேட்டு தலைமை தாங்கினார். சீர்காழி சினிவாச சுப்பராய அரசு பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். கல்லுாரி முதல்வரின் நேர்முக உதவியாளர் சரவணன் வரவேற்றார்.ஒருங்கிணைப்பாளர் கேசவன், துணை ஒருங்கிணைப்பாளர் சுதாகர் ஆகியோர் திறன் மேம்பாட்டு பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி பேசினர். இதில் அனைத்து துறை விரிவுரையாளர்கள், பல்வேறு கல்லுாரியிலிருந்து வந்த 40 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Similar News