கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

Update: 2024-09-11 05:53 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
உளுந்துார்பேட்டையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் ஆகியன சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகம் முன், நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெகன் தலைமை தாங்கினார்.டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மதிப்பூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொருளாளர் பாரதிராஜா, வட்டாரத் தலைவர் சவுந்தர்ராஜன், வட்டார பொருளாளர் சசிதரன், வட்டார செயலாளர் பிரசாந்த், மாவட்ட துணைச் செயலாளர் மகிமை அந்தோணி, மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜ், வட்ட செயலாளர் மணிவாசகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Similar News