மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனாருக்கு அதிமுக சார்பில் புகழஞ்சலி.

மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனாருக்கு அதிமுக சார்பில் புகழஞ்சலி.

Update: 2024-09-11 08:04 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனாருக்கு அதிமுக சார்பில் புகழஞ்சலி. கரூர் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்ட மேடையில் மறைந்த சுதந்திரப் போராட்ட வீரரும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் பாதுகாவலருமான இமானுவேல் சேகரனார் 67 வது நினைவு தினத்தை முன்னிட்டு, கரூர் மாவட்ட தேவேந்திர வேளாளர் உறவுகள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட அதிமுக அவை தலைவர் திருவிக தலைமையில் இமானுவேல் சேகரனார் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி புகழஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் தானேஸ் (எ) முத்துக்குமார், மாவட்ட ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க செயலாளர் ரங்கராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், தேவேந்திர குல சமுதாயத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர்

Similar News