காணியாளம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தினார் எம் எல் ஏ. சிவகாமசுந்தரி.

காணியாளம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தினார் எம் எல் ஏ.சிவகாமசுந்தரி.

Update: 2024-09-11 11:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காணியாளம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தினார் எம் எல் ஏ.சிவகாமசுந்தரி. கரூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டி வழங்கும் விழா, கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, காணியாளம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கடவூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ராமலிங்கம், மாவட்ட கல்வி அலுவலர் ராமநாதன், காணியாளம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மாரிதங்காள், பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகம் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இந்தப் பள்ளியில் பயிலும் 41 மாணவர்கள், 24 மாணவிகள் என மொத்தம் 65 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமி சுந்தரி.

Similar News