கம்மாபுரம் மத்திய ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

முன்னாள் எம்எல்ஏ பங்கேற்பு

Update: 2024-09-11 17:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கடலூர் கிழக்கு மாவட்டம் கம்மாபுரம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் அரசக்குழியில் நடந்தது. அவைத்தலைவர் பட்டு குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏ துரை கே சரவணன், மாநிலக் கழக பேச்சாளர் தானூர் சிவக்கொழுந்து, மாவட்ட துணை செயலாளர் ஞானமுத்து ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். இதில் மத்திய ஒன்றிய நிர்வாகிகள் அருட்பெருஞ்ஜோதி, பாக்கியலட்சுமி, குருசாமி, பழனியப்பன், அந்தோணி, ஆபேல் மற்றும் கிளைக் கழக செயலாளர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட சார்பணி நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் மார்க், இளைஞரணி தம்பிதுரை நன்றி கூறினார்கள். இக்கூட்டத்தில் கழகத்தின் பவள விழாவில் கம்மாபுரம் மத்திய ஒன்றிய திமுகவினர் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும், இல்லம் தோறும் மகளிர் அணி மற்றும் இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்க்கை நடத்திட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News