திருமலைராயன் சமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட சூளைமேடு பகுதியில் உள்ள சேத்தி குளத்தில் வாலிபர் சடலம் கிடப்பதாக கணேஷ் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. பின்னர் அங்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு, கொலையா? தற்கொலையா? என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் போலீசார் இந்த நபர் எந்த கிராமத்தை சேர்ந்தவர் என பொது மக்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.