பெண் மர்ம சாவு: போலீசார் விசாரணை!

குற்றச் செய்திகள்

Update: 2024-09-12 04:08 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மணமேல்குடி: நாகப்பட்டினம் மாவட்டம் வேதா ரண்யம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் மனைவி நீலாவதி(28). கணவரை பிரிந்த இவர் பெண் குழந் தையுடன் மணமேல்குடி அருகே உள்ள ராஜா தோப்பு கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் நீலாவதி வீட்டில் இருந்து வெளியே வராததால் பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்வி என்பவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கு நீலாவதி தலையில் காயத்துடன், சேலையால் கழுத்து இறுக்கியபடி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மணமேல்குடி போலீசார் வழக்குப் பதிந்து நீலாவதி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News