பல்லடத்தை அடுத்த பொங்கலூர் வட்டாரம், மாதப்பூர் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைந்துள்ளது.இதன் நுழைவாயிலில் உள்ள கோபுரத்தில் பெரியாரின் இல்லாமல் சமத்துவபுரம் என குறிப்பிட்டிருந்தது.இதனை திருத்தக் கோரி தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்திருந்தனர். அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது சமத்துவபுர நுழைவாயில் "பெரியார் நினைவு சமத்துவபுரம்" என்று திருத்தி எழுதப்பட்டது.உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.