நாட்ரம்பள்ளி அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

நாட்ரம்பள்ளி அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை

Update: 2024-09-12 12:12 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் நாட்ரம்பள்ளி அருகே சண்டியூர் பகுதியில் அத்தை பெண்ணை திருமணம் செய்து தர மறுத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நபரால் பரபரப்பு! கையில் கட்டி இருந்த ஸ்மார்ட் வாட்ச்யின் மூலம் அடையாளம் கண்டு கொண்ட போலீசார் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகன் சிரஞ்சீவி (32 )இவர் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள டெல்டா கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவருடைய அத்தை பெண்ணான 17 வயது சிறுமியை தனக்கு திருமணம் செய்து கொடுக்கும்படி சிரஞ்சீவி கேட்டுள்ளார். அதற்கு சிறுமியின் பெற்றோர் மறுத்ததால் மனமுடைந்த சிரஞ்சீவி நேற்று வீட்டை விட்டு வெளியே சென்றனர் மீண்டும் வீடு திரும்பவில்லை வீட்டில் உள்ள அவருடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிரஞ்சீவி கிடைக்காத நிலையில் இன்று சண்டியர் பகுதியில் அருள்மொழி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். இது குறித்து அருள்மொழி நாட்றம்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்றம்பள்ளி போலீசார் சிரஞ்சீவி கையில் கட்டி இருந்த ஸ்மார்ட் வாட்ச் மூலமாக சிரஞ்சீவியின் அப்பா மணி என்பவருக்கு போலீசார் போன் செய்து தகவல் கொடுத்துள்ளனர். அதன்பின் நாட்றம்பள்ளி போலீசார் சிரஞ்சீவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அத்தை பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News