கிணற்றில் விழுந்த முதியவர் பரிதாபமாக பலி

பலி

Update: 2024-09-12 19:27 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுக்கா பல்லவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (80). இவர் நேற்று தனக்கு சொந்தமான விவசாய கிணற்றில் உள்ள செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக முதியவர் முருகேசன் கிணற்றில் தவறி விழுந்தார். இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ரிஷிவந்தியம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழுவுக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்வு இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழுவினர் கிணற்றினுள் மூச்சுத்திணறி இறந்து கிடந்த முருகேசன் உடலை வலை மூலம் மீட்டனர்.பின்பு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீரில் மூழ்கி முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News