மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எம்பி சுதா தலைமையில் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டத்தில் எம்.பி மற்றும் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர் .

Update: 2024-09-13 06:53 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் அக்குழுவின் தலைவர் சுதா எம்.பி. தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, எம்எல்ஏக்கள் ராஜகுமார், நிவேதாமுருகன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், வேளாண்மைத்துறை, சுகாதார நலப்பணிகள், பள்ளி கல்வித்துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் மத்தியஅரசின் நிதி சார்ந்த திட்டங்களின் செயலாக்கங்கள் குறித்து குழுத்தலைவர் சுதா எம்.பி. ஆய்வு செய்து, அத்திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், பயனாளிகளின் விபரம், திட்ட இலக்கீடு, இதுவரை எட்டப்பட்ட திட்ட இலக்கீடு விபரங்களை அவர் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, மக்கள் பிரதிநிதிகளிடம் அவர்களது பகுதியில் உள்ள தேவைகள் குறித்து கேட்டறிந்து, அதனை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும், திட்டப்பணிகளை தரமாகவும் விரைந்து செயல்படுத்தியும் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Similar News