நடைபாதையுடன் கூடிய குளம் நுழைவு வாயில் அரசு எம்பலம் குடிமகன்களால் உடைப்பு

மயிலாடுதுறையில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வரும் குளம் நுழைவு வாயிலில்  தமிழ்நாடு அரசு எம்பளத்தை மர்ம நபர்கள் அடித்து உடைத்து சேதம்

Update: 2024-09-13 07:01 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
. மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் கீழவீதியில் உள்ள தேரடிக்குளம் என்று அழைக்கப்படும் ஐய்யன்குளம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் 3 பக்க கரைகள் பலப்படுத்தப்பட்டு நடைபாதை வசதியுடன் சீரமைக்கப்பட்டு மின்விளக்குகள் வைக்கப்பட்டது, இந்தக் குளத்தில் உள்ள நடைபாதையை பொதுமக்கள் தினந்தோறும் காலை மாலை மற்றும் மின்விளக்குகள் உள்ளதால் இரவிலும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த குளத்தின் கரையில் இரவு நேரத்தில்மதுபிரியர்கள், சீட்டாட்டக்காரர்களின் கூடாரமாக உள்ளதால் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் இந்தக் குளத்தின் முகப்பு பகுதியில் மயிலாடுதுறை நகராட்சி கலைஞர் நகர்புர மேம்பாட்டு திட்டம் அய்யன்குளம் என்ற பெயரைத் தாங்கி முன்னாள் முதல்வர் கருணாநிதி தற்போதைய முதல்வர் ஸ்டாலின் உருவப்படங்கள் மற்றும் தமிழக அரசின் சின்னம் பொறிக்கப்பட்டு மின்னொளியில் ஒளிரும் வகையில் இருந்த முகப்பு நுழைவு வாயிலை மர்ம் நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மர்ம நபர்கள் அடித்து உடைத்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இச்சம்பவம் அறிந்து வந்த மயிலாடுதுறை  போலீசார் நேரில் பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Similar News