கூட்டுறவுத்துறை பணியாளர் குறைதீர் முகாம்

முகாம்

Update: 2024-09-14 03:22 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி நேப்பால் தெருவில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கூட்டுறவுத்துறை பணியாளர் நாள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன், விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் சொர்ணலட்சுமி தலைமை தாங்கினார். இதில், சங்க பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற சங்க பணியாளர்களிடமிருந்து 20 மனுக்கள் பெறப்பட்டன. நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சரக துணைப்பதிவாளர் சுகந்தலதா, துணைப்பதிவாளர் (பொது விநியோக திட்டம்) சுரேஷ் மற்றும் கூட்டுறவு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

Similar News