கோவில்களுக்கு சிமென்ட் வழங்கல்

வழங்கல்

Update: 2024-09-15 04:36 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சங்கராபுரம் அம்மன் ஏஜன்சீஸ் நிறுவனம் சார்பில், 10 கோவில்களின் திருப்பணிக்கு 520 மூட்டை சிமென்ட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அம்புஜா சிமென்ட் வட்டார மேலாளர் சீனுவாசன் தலைமை தாங்கினார். சங்கராபுரம் அம்மன் ஏஜன்சீஸ் உரிமையாளர் கோவிந்தராஜ் செம்பராம்பட்டு முருகர் கோவிலுக்கு 75 மூட்டை, எஸ்.வி.பாளையம் வராகி அம்மன் கோவிலுக்கு 50, பாவளம் மாரியம்மன் கோவிலுக்கு 50, அரசம்பட்டு அய்யப்பன் கோவிலுக்கு 50, புதுப்பட்டு சிவன் கோவிலுக்கு 30, வடசெரளுர் திரவுபதி அம்மன் கோவிலுக்கு 50, ராவுத்த நல்லுார் ஆஞ்சநேயர் கோவிலுக்கு 50, பாண்டலம் பெரிநாயகி அம்மன் கோவிலுக்கு 25, எகால் சிவன் கோவிலுக்கு 50, பொய்க்குனம் முனியப்பன் கோவிலுக்கு 50 என, 520 மூட்டை சிமென்ட் இலவசமாக வழங்கினார். நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் ராமச்சந்திரன், ஜனார்த்தனன், கதிரவன், வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், அகிலன், செம்பராம்பட்டு ஊராட்சி தலைவர் வைத்யநாதன், இன்னர் வீல் கிளப் தலைவி சுபாஷினி ரமேஷ், செயலாளர் மஞ்சளா கோவிந்தராஜ், ரோட்டரி தலைவர் அசோக்குமார், கவுன்சிலர் வீரமணி ஆகியோர் பங்கேற்றனர்.

Similar News