கேத்தம்பட்டியில் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கேத்தம்பட்டியில் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2024-09-16 05:56 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கேத்தம்பட்டியில் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுக்கா, அப்பிபாளையம் ஊராட்சியில் உள்ள கேத்தம்பட்டியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழா இன்று அதிகாலையில் மங்கல இசை உடன் துவங்கியது. பின்னர் யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவில் கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள கலசத்தில் சிவாச்சாரியார்கள் ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு சிறப்பாக நடத்தினர். அதனைத் தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மனுக்கு மகா தீபாதாரணையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அப்பிபாளையம் ஊராட்சி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News