முறைகேடாக கோவில் வளாகத்தில் கடைகட்ட அனுமதி

ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு காவல் நிலையத்தில் கடிதம்

Update: 2024-09-18 14:29 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பல்லடம் கடைவீதி அருள்மிகு மாகாளியம்மன் கோயில் வளாகத்தில் கடைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் முறைகேடாக கடை கட்டுவதற்கு வேற்று மதத்தவர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இன்னிலையில் அதனை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி பல்லடம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் அவர்களிடம் கடிதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் இந்து பரிவாரக் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சாய் குமரன், சமூக அலுவலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை இந்து பரிவார் பொருளாளர் தளபதி தன்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News