நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சி ஐ டி யு கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டம்

நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சி ஐ டி யு கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டம்

Update: 2024-09-19 09:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சி ஐ டி யு கமுயூனிஸ்ட் கட்சி மாநில துணைத்தலைவர் தேவதாஸ் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களின் பிரச்சனைகளை பல ஆண்டுகளாகியும் சரி செய்யாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சி ஐ டி யு கமுயூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நகராட்சி அலுவலகத்தில் மாநிலத் துணைத் தலைவர் தேவதாஸ் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த 93 லட்சம் பணத்தை கடந்து 8 மாதமாக கூட்டுறவு கடன் சங்கத்திற்கு செலுத்தாத நிலையில் அந்தத் தொகையினை உடனே செலுத்த வேண்டும், என்றும் தூய்மை பணியாளர்களுக்கு தளவாட சாமான்கள் மற்றும் மாஸ்க், கையுறை உடனே வழங்க வேண்டும், என்றும் நிரந்தர பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும், நிரந்தர பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு குளறுபடி உள்ளதால் அதனை உடனே சீர் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் செய்தியாளர் சந்திப்பில் கூறியது துப்புரவு பணியாளர்களுக்கு பல்வேறு கோரிக்கைகளை குறித்து உள்ளிருப்பு போராட்டம் செய்தோம் நகராட்சி ஆணையர் நாராயண் எங்களுடையகோரிக்கைகளை குறித்து துப்புரவு தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த 93 லட்சம் பணத்தை மூன்று தவணைகளில் செலுத்துவதாக கூறினார் துப்புரவு பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி விடுவதாக கூறியதன் அடிப்படையில் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு சென்றனர் இந்த நிகழ்ச்சியில் காசி சிஐடியு தலைவர் சரவணன் மாவட்ட செயலாளர் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர் பேட்டி தேவதாஸ் மாநில துணை தலைவர் சி. ஐ. டி .யு

Similar News