திருப்பத்தூரில் தேனீக்கள் கொட்டியதில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதி...

திருப்பத்தூரில் தேனீக்கள் கொட்டியதில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதி...

Update: 2024-09-19 09:53 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் தேனீக்கள் கொட்டியதில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதி... திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த இந்திரா நகர் பகுதியில் சாலையோரமாக பெரிய அளவில் புளியமரம் இருந்துள்ளது. மரத்தில் தேனீகள் கூடு கட்டி இருந்துள்ளது. மரத்திலிருந்து வெளியேறிய தேனீக்கள் சாலையில் சென்றவர்களை கொட்டியுள்ளது இதனால் அலறடித்துக் கொண்டு ஓடி உள்ளனர் இருந்த போதிலும் துரத்தி துரத்தி கொட்டியதில் காயம் அடைந்துள்ளனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில் தேவராஜ், நாகராஜ், காஞ்சனா, மூதாட்டி புஷ்பா ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News