திருப்பத்தூர் அருகே விஷம் குடித்து தற்கொலை

திருப்பத்தூர் அருகே குடும்ப தகராறு காரணமாக விஷம் குடித்து தற்கொலை

Update: 2024-09-19 10:02 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே குடும்ப கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை கத்தியால் குத்திவிட்டு சிறையில் இருந்து வெளிவந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட வைரல் வீடியே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கல்லுகுட்டை புதூர் பகுதியை சேர்ந்த பிரகாசம் இவரது மகன் பிரிவின் வயது 30 இவர் சென்னையில் பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்தார் இவருக்கு வெங்கடேஸ்வராபகுதியை சேர்ந்த சக்திவேல் இவரது மகள் நந்தினி வயது 28 இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகின்றது கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் ஒரு வருட காலமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர் இந்நிலையில் நந்தினி திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார் இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நந்தினி வேலை பார்க்கும் இடத்தில் பிரவின் சென்று நந்தினியை கத்தியால் குத்தி படுகாயங்களுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று சென்றனர் இந்நிலையில் பிரவினை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் பின்னர் சிறையிலிருந்து வெளிவந்த பிரவின் நந்தினியை சேர்ந்து வாழ கூப்பிட்டதாக கூறப்படுகின்றது இந்நிலையில் திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் நந்தினி வீட்டார் திருமணத்திற்கு போட்ட நகை பணம் திருப்பி கேட்டதாக கூறப்படுகின்றது அதற்கு பிரவின் முறை படி விவாகரத்து முடிந்த பின்பு தருவதாக கூறியுள்ளார் வாழ்கையில் வெறுப்படைந்த பிரவின் விஷம் குடித்து தற்கொலை செய்யும் வீடியோவை வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டார் கிராமிய போலீசார் பிரேத உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்

Similar News