குற்ற வழக்கு நிலுவை உள்ள நபர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என உத்தரவு நோட்டீஸ் ஒட்டி விளம்பரம்..

குற்ற வழக்கு நிலுவை உள்ள நபர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என உத்தரவு நோட்டீஸ் ஒட்டி விளம்பரம்..

Update: 2024-09-20 14:15 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ராசிபுரம் அடுத்த முத்துகாளிப்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் நடேசன். இவர் மீது கடந்த 1997-ம் ஆண்டு முதல் குற்ற வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு விசாரணைக்காக நடேசன் நீண்ட காலமாக கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார். அதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு உதவி சார்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் நடேசனை அடுத்த மாதம் 16-ந் தேதிக்குள் ராசிபுரம் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். அதற்கான உத்தரவின் நகலை முத்துக்காளிப்பட்டியில் உள்ள நடேசனின் வீடு. பஸ்நிலையம் . காவல் நிலையம் நீதி மன்றம் ஆகிய இடங்களில் ராசிபுரம் போலீசாரல் உத்தரவை ஒட்டி விளம்பரப்படுத்தப்பட்டது.

Similar News