வாலிபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 3 வருடங்கள் சிறை

நத்தத்தில் போக்சொ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 3 வருடங்கள் சிறை, ரூ.55 ஆயிரம் அபராதம்

Update: 2024-09-20 14:12 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடந்த 2023-ம் ஆண்டு கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக நத்தம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த பாண்டிசெல்வம்(26) என்பவரை நத்தம் போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் நத்தம் காவல் துறையினர் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி அவர்கள் பாண்டிசெல்வதற்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.55 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Similar News