கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் ஏராளமானோர் பங்கேற்பு!

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் ஏராளமானோர் பங்கேற்பு!

Update: 2024-09-21 11:48 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் ஏராளமானோர் பங்கேற்பு! செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மின்னல்சித்தாமூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி தலைமையில் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சி சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய குழு பெருந்தலைவர் கண்ணன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமினை துவக்கி வைத்தார்..இந்த முகாமில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இதய நோய் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் மற்றும் தோல் நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும் குழந்தையை ஈன்றெடுத்த தாய்மார்களுக்கு குழந்தை பரிசு பெட்டகமும் இலவசமாக வழங்கப்பட்டது மேலும் மாதாந்திரம் மாத்திரை எடுத்துக் கொள்ளும் முதியவர்களுக்கு அவரவர் நோய்க்கு ஏற்ப மாத்திரைகள் அடங்கிய மருந்து பெட்டகமும் வழங்கப்பட்டது இறுதியாக மருத்துவ முகாமினை பார்வையிட்டு பொதுமக்கள் அனைவரும் பொறுமை காத்து மருத்துவம் பெற்று செல்ல வேண்டுமென கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் பார்த்தசாரதி, வட்டார மருத்துவர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News