விழுப்புரத்தில் தீ விபத்தில் வீடிழந்தவருக்கு நிவாரண உதவி வழங்கிய

தீ விபத்தில் வீடிழந்தவருக்கு நிவாரண உதவி

Update: 2024-09-22 01:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தளவானூரைச் சோ்ந்தவா் அன்பரசு (45). ஜேசிபி ஓட்டுநரான இவா், குடும்பத்துடன் வசித்து வந்தாா். வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் கவிதாவும், தன்வந்தனும் இருந்தனா். மற்றவா்கள் வெளியே இருந்தனா். இந்த நிலையில் திடீரென வீட்டில் தீப்பற்றியது.இதில் வீட்டிலிருந்த பொருள்கள், நகைகள், வீட்டு உபயோகப் பொருள்கள், அடையாள அட்டைகள், பாடப்புத்தகங்கள் உள்ளிட்டவை முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறையினா் நிகழ்விடம் விரைந்து தீயை அணைத்தனா்.இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் இரா. லட்சுமணன் எம்.எல்.ஏ. சனிக்கிழமை காலை தளவானூா் சென்று, தீ விபத்தில் வீட்டை இழந்த அன்பரசுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினாா். தொடா்ந்து காய்கறி, மளிகைப் பொருள்கள், அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களையும், ரூ. 5 ஆயிரம் நிதியுதவியும் வழங்கினாா்.தீவிபத்தில் எரிந்து சாம்பலான பாடப்புத்தகங்கள், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அன்பரசு குடும்பத்தினருக்கு பெற்றுத் தர வருவாய்த் துறையினருக்கு இரா. லட்சுமணன் எம்.எல்.ஏ. உத்தரவிட்டாா். மேலும் அரசுத் தொகுப்பு வீடு வழங்கவும் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தினாா்.

Similar News