சேதமடைந்த நடை மேம்பாலம், அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

சேதமடைந்த நடை மேம்பாலம், அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

Update: 2024-09-22 10:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நடை மேம்பாலம் முழு சேதம் அடைந்துள்ளதால் எந்த நேரத்திலும் விழுந்து விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளதால் அதை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மோச்சேரி செல்லும் சாலையில் இரு தேசிய நெடுஞ்சாலைகள் குறுக்கே சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பினால் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டிருந்தது அந்த நடை மேம்பாலம் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தாமல் அப்படியே இருந்ததால் தற்பொழுது இந்த மேம்பாலம் முழுமையாக முழு சேரமடைந்து யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது இது எந்த நேரத்திலும் விழுந்து விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளதால் அதை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News