கரூரில், பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் செய்த பாஜகவினர்.

கரூரில், பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் செய்த பாஜகவினர்.

Update: 2024-09-22 11:50 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூரில், பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் செய்த பாஜகவினர். கரூரில், பாரத பிரதமர் மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் பாஜக இளைஞர் அணி சார்பில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தானம் செய்தனர் பாரத பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாளை இந்தியா முழுவதும் உள்ள பிஜேபி கட்சினர் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், கரூர் பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பில், மாவட்ட செயலாளர் தீனா தலைமையில் , இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமில், கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் செந்தில்நாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரத்த தானம் செய்தார். இதனை தொடர்ந்து கட்சியின் இளைஞர் அணியை சேர்ந்த சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

Similar News