புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையை திறந்து வைத்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி

புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையை திறந்து வைத்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி

Update: 2024-09-22 12:17 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையை திறந்து வைத்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மேட்டு திருக்காம்புலியூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் குத்துவிளக்கேற்றி விற்பனையை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்டவற்றை எம் எல் ஏ எடை போட்டு பொதுமக்களுக்கு வழங்கினார். நியாய விலை கடையை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர் பின்னர் பேசுகையில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கொண்டு வந்த மகளிர் உரிமைத்தொகை மற்றும் விலையில்லா பேருந்து வசதி, கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை என பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய, நகர நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News