கிருஷ்ணராயபுரத்தில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தினார் எம் எல் ஏ. சிவகாமசுந்தரி.

கிருஷ்ணராயபுரத்தில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தினார் எம் எல் ஏ. சிவகாமசுந்தரி.

Update: 2024-09-24 10:21 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கிருஷ்ணராயபுரத்தில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தினார் எம் எல் ஏ. சிவகாமசுந்தரி. கரூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வருகின்றனர். இதன் அடிப்படையில், இன்று கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரத்தினம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, இந்த பள்ளியில் பயிலும் 67 மாணாக்கர்கள், 55 மாணவிகள் என மொத்தம் 122 பேருக்கு தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மிதிவண்டிகளைப் பெற்றுக் கொண்ட மாணாக்கர்கள் தமிழக அரசுக்கும், எம்எல்ஏ சிவகாமசுந்தரிக்கும் நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராமநாதன் செட்டி, கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி தலைவர் சேது மணி மகாலிங்கம், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவி ராஜா, கிருஷ்ணராயபுரம் நகர செயலாளர் சசிகுமார் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் இருபால் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விலையில்லா மிதி வண்டி வழங்கும் விழாவை சிறப்பித்தனர்.

Similar News