விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 27.09.2024 அன்று நடைபெற உள்ளது -மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

Update: 2024-09-24 11:47 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 27.09.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், வேளாண்மை மற்றும் சகோதரத்துறையால் சமீபத்திய வேளாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைக்கப்படவுள்ளது.எனவே, தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைகள் சம்பந்தமான திட்டங்கள் மற்றும் குறைகளை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம். மேலும், தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மனுக்களாக வழங்கலாம். விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுக்கள், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி, அதன்மீது தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே. விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

Similar News