திருப்பூரில் முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினர் ஆறு பேர் கைது!

திருப்பூரில் முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினர் 6 பேரை கைது செய்து தெற்கு காவல் நிலைய போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-09-25 11:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்த ஆறு பங்களாதேஷ் இளைஞர்கள் கைது‌. பங்களாதேஷ் நாராயண காஞ்சி பகுதியை சேர்ந்த ஆறு இளைஞர்கள் வேலை தேடி கவுகாத்தி வழியாக  திருப்பூருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பாக வந்துள்ளனர். பங்களாதேஷை சேர்ந்த தன்வீர், ராஜீப்தவுன், எம்.டி.அஸ்லாம், எம்.டி.அல் அஸ்லாம், எம்.டி.ரூகு அமீன் மற்றும் சோமூன்சேக் என ஆறு பேரும் கூலிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் இந்தியாவை சேர்ந்தவர்கள் என கூறி பணியில் சேர்ந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்த பங்களாதேஷ் இளைஞர்கள் காவல்துறையை கண்டதும் வேகமாக ஓடியதாக கூறப்படுகிறது பின்னர் காவல்துறையினர் துரத்தி பிடித்ததில் இவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர் இதனால் சந்தேகம் அடைந்த திருப்பூர் தெற்கு காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் இவர்கள் பங்களாதேஷை சேர்ந்தவர்கள் என்பதும்  திருப்பூருக்கு வேலை தேடி வந்ததும் அவர்களிடம் முறையான பாஸ்போர்ட் விசா இல்லை என்பதும் தெரிய வந்தது . இதை அடுத்து திருப்பூர் தெற்கு காவல் துறையினர் இளைஞர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

Similar News