திட்டுப்பாறையில் லாரி மோதியதில் வடமாநில தொழிலாளி பலி

காங்கேயம் அடுத்த திட்டுப்பாறையில் இரண்டு லாரிகள் மோதி வட மாநில தொழிலாளி பலி

Update: 2024-09-28 05:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காங்கேயம் அடுத்த திட்டுப்பாறை பகுதியில் தனியார் கல்லூரி எதிரே நெடுஞ்சாலை பணியில் ஈடுபட்டிருந்தனர். தனியார் சாலை ஒப்பந்த நிறுவனத்திற்கான லாரி சாலையின் ஓரம் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்துள்ளது. அப்போது காங்கேயத்தில் இருந்து சென்னிமலை நோக்கி அதி வேகமாக சென்ற கிரஷர் லாரி மோதியதில் தண்ணீர் லாரி சாலையின் குறுக்கே கவிழ்ந்தது. இந்த விபத்தில் இரண்டு லாரி சாலையில் குறுக்கே கவிழ்ந்தது. இந்த விபத்தில் இரண்டு லாரியில் இருந்த டிரைவர்கள் மற்றும் உதவியாளர்கள் காயமடைந்தனர். மேலும் இந்த விபத்தில் சாலையில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தர்மேத்தர் என்ற ஜித்தேந்தர் புய்யா (33) என்பவரின் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காங்கேயம் காவல்துறையினர் காயமடைந்தவர்களையும் உயிர் வந்தவரையும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காங்கேயம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News