ராசிபுரம் ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ணன் கோவிலில் சிறப்பு அலங்காரம்..

ராசிபுரம் ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ணன் கோவிலில் சிறப்பு அலங்காரம்..

Update: 2024-09-28 13:10 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் ஆத்தூர் சாலை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ணன் கோவிலில் புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ணன் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ணன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Similar News