குமாரபாளையத்தில் பள்ளி மாணவன் தூரி விளையாடும் போது கழுத்து இறுகி உயிரிழப்பு.
குமாரபாளையத்தில் பள்ளி மாணவன் தூரி விளையாடும் போது கழுத்து இறுகி உயிரிழப்பு.
குமாரபாளையத்தில் பள்ளி மாணவன் தூரி விளையாடும் போது கழுத்து இறுகி உயிரிழப்பு. கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்லாண்டிபட்டி அருகே உள்ள குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெத்துராஜ் மகன் விஷ்வா வயது 11. இவர் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் செப்டம்பர் 27ஆம் தேதி காலை 7 மணி அளவில், அவரது வீட்டின் அருகே தூரிகட்டி விஷ்வா விளையாடிக் கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக அப்போது தூரியில் இருந்து கீழே விழுந்த போது,அவர் கழுத்தில் அணிந்திருந்த ஷால் அவர் கழுத்தை இறுக்கியது. உடனே பள்ளி மாணவனை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தது தொடர்ந்து, அவரது தந்தை பெத்துராஜ் இது தொடர்பாக காவல்துறையினர்க்க்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த மாணவனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.