வடுகபட்டியில் வயலில் பாம்பு கடித்து பெண் உயிர் இழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.

வடுகபட்டியில் வயலில் பாம்பு கடித்து பெண் உயிர் இழப்பு.காவல்துறை வழக்கு பதிவு.

Update: 2024-09-28 13:46 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
வடுகபட்டியில் வயலில் பாம்பு கடித்து பெண் உயிர் இழப்பு.காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே உள்ள வடுகப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார் மனைவி குணவதி வயது 35. இவர் விவசாயி. செப்டம்பர் 22ஆம் தேதி காலை 8:15 மணியளவில் வடுகப்பட்டி பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் குணவதி வேலை செய்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராத நேரத்தில் பாம்பு கடித்து உள்ளது. இதனால் அலரி துடித்த குணவதியை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த குணவதி சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 27ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த குணவதியின் கணவர் செந்தில்குமார், இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த குணவதியின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Similar News