மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டி

நகரத் தலைவர் நகரச் செயலாளர் வழங்கினார்கள்

Update: 2024-09-29 07:56 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களளின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன் அவர்களின் ஆலோசனையின் படி பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி 239 வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சித்தலைவர் திருமதி.கவிதாமணி ராஜேந்திரகுமார் மற்றும் நகர திமுக செயலாளர் ந.ராஜேந்திரகுமார் ஆகியோர் 239 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கினார்கள். இந்த நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள்,மாணவிகள்,மாவட்ட,நகர கழக நிர்வாகிகள்,நகர மன்ற உறுப்பினர்கள்,வட்டச் செயலாளர்கள்,அனைத்து அணி பொறுப்பாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். .

Similar News