கரூரில் விவசாயிகளின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய மின்வாரிய தலைமை பொறியாளர்.

கரூரில் விவசாயிகளின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய மின்வாரிய தலைமை பொறியாளர்.

Update: 2024-10-01 09:01 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூரில் விவசாயிகளின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய மின்வாரிய தலைமை பொறியாளர். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று மின்வாரிய தலைமை பொறியாளரை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்து, அதன் அடிப்படையில் மனுக்களை அளித்தனர். இதன் அடிப்படையில் கரூர் மின்வாரிய தலைமை பொறியாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் ராஜா தலைமையிலான விவசாயிகள் இன்று மனு அளித்தனர். அந்த மனுவில் தட்கல் திட்டத்திலும், அனைத்து வகையான வேளாண் மின் இணைப்பு திட்டங்களிலும் 2- ஆண்டுகளாக சுமார் 30,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் காக்க வைக்கப்பட்டுள்ளதால், உடனடியாக மின்சாரம் இணைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். அப்போது, விவசாயிகள் மின்வாரிய தலைமை பொறியாளரிடம் மின்மிகு மாநிலமான தமிழ்நாட்டில், வீடுகளுக்கு பதினைந்து நாட்களிலும், வணிகத்திற்கும் தொழிற்சாலைகளுக்கும் 30 நாட்களும் மின் இணைப்பு கொடுக்கும் தமிழ்நாடு மின்வாரியம், சாதாரண திட்டத்தில் பணம் செலுத்திய விவசாயிகளை 15 ஆண்டுகள் காக்க வைப்பது நியாயம் அல்ல என தெரிவித்ததோடு, அரசு பணம் செலுத்த கூறி அறிவித்த தட்கல் திட்டத்தில்,2,50,000- முதல் 3,00,000- வரை பணம் செலுத்தி, 90 நாட்களில் இணைப்பு பெறலாம் என கூறி, 3- வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. எப்போது வழங்குவீர்கள்? என்ற கேள்விக்கு, தலைமை பொறியாளர் பதிலளிக்க முடியாமல் திணறினார் பின்னர் சுதாரித்து மின்வாரியமும், வேளாண் துறையும் இணைந்து அரசுக்கு பரிந்துரை செய்தால், அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும், தற்போது நீங்கள் அளித்துள்ள மனுவை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் கூறி விவசாயிகளை சமாதானப்படுத்தி விரைவில் நடவடிக்கை எடுக்க ஆவண செய்வதாக கூறினார். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் மனுக்களை அழித்துவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Similar News