கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

10.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

Update: 2024-10-01 16:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது தொடர்ச்சியாக கஞ்சா விற்பனை செய்யும் பெண்ணின் தொலைபேசி தொடர்பை வைத்து ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட 10.5 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய காவல்துறையினர். கஞ்சா கொண்டு வந்த திருப்பூரை சேர்ந்த குகேஷ்குமார் மற்றும் சில்லறை விற்பனைக்காக கஞ்சாவை வாங்க இருந்த போடியைச் சேர்ந்த ஜோதி என்ற பெண் இருவரும் கைது செய்யப்பட்டு காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். திருப்பதியில் இருந்து பேருந்து மூலம் தேனி வந்து இறங்கிய குகேஷ்குமாரை தனிப்படையினர் கைது செய்து அவரிடம் இருந்த பையினை பரிசோதனை செய்ததில் ஐந்து பொட்டலங்களில் சுமார் 10.5 கிலோ மதிப்பிலான கஞ்சா இருப்பதை உறுதி செய்தனர். ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி போடிக்கு விற்பனை செய்ய வந்த குகேஷ்குமார் மற்றும் அதனை வாங்க இருந்த ஜோதி இருவரையும் போடி நகர் காவல் நிலையத்தில் விசாரணை செய்து அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து போடி நகர் காவல் துறையினர் அவர்களை சிறையில் அடைத்தனர்

Similar News