பிறந்தநாளை முன்னிட்டு குமரன் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. கலெக்டர், எம். எல. ஏ பங்கேற்பு!

திருப்பூரில் பிறந்தநாளை முன்னிட்டு குமரன் திருவுருவச் சிலைக்கு கலெக்டர், எம். எல். ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2024-10-04 10:54 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பிறந்தநாளை முன்னிட்டு குமரன் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. கலெக்டர்,  எம்.எல்.ஏ. பங்கேற்பு! திருப்பூர், பிறந்தநாளை முன்னிட்டு சுதந்திர போராட்ட வீரர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். சுதந்திர போராட்ட வீரர் தியாகி திருப்பூர் குமரன் பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள திருப்பூர் குமரன் நினைவு மண்டபத்தில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி கலெக்டர் கிறிஸ்துராஜ் மரியாதை செலுத்தினார். செல்வராஜ் எம்.எல்.ஏ. மற்றும் மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இவ்விழாவில் கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசினார்.

Similar News