ஆரணி பகுதியில் பலத்த மழை.

மரம் சாலையில் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Update: 2024-10-04 16:32 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆரணி பகுதியில் பலத்த மழை பெய்ததால் சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆரணி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியிலிருந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ஆரணியில் கால்வாய் அடைப்பு காரணமாக மழைநீர் சாலையில் ஓடியது. பின்னர் ஆரணி -வந்தவாசி சாலையில் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறையினர் ADE நாராயணன் RI கோமதி மற்றும் சாலை பணியாளர்கள் காவல்துறையினர் நேரில் சென்று மரத்தை அகற்றி போக்குவரத்து சீர் செய்தனர்.

Similar News