நகர்ப்புற வாழ்வாதார இயக்க பொதுக்குழு கூட்டம்

குமாரபாளையத்தில் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2024-10-04 16:34 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. அமைப்பின் செயலர் மகாலட்சுமி தலைமை வகித்து வரவு செலவு கணக்குகளை சமர்பித்தார். குமாரபாளையம் நகராட்சியில் வாகைசூடி பகுதி அளவிலான இந்த கூட்டத்தில் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு பங்கேற்று, பெண்களுக்கான காப்பீடு, வங்கி கடன் பெறுதல், தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்துதல், தொழில் முனைவோர்களுக்கான பயிற்சி, உணவு பதப்படுத்தும் தொழில் கடன் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து பேசினார். சமுதாய அமைப்பாளர்கள் ரகு, முரளி பங்கேற்று, கூட்டமைப்பின் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து பேசினார்கள். சமுதாய வள பயிற்றுனர் நாராயணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News